அதான் சொல்லும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை ஜனாதிபதி மஹிந்த வழங்கிவைத்தார்
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் நடாத்தப்பட்ட அதான் சொல்லும் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கான பரிசலிப்பு விழா கடந்த 30ஆம் திகதி கொழும்பு-07 இல் உள்ள நெலும் பொக்குன கலையரங்கத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வு ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான இணைப்பாளர் மசூர் மௌலானாவின் அனுசரணையில் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.




Post a Comment