Header Ads



'முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறியது, மைத்திரியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது'

-எம்.வை.அமீர் -

அரசில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியது தொடர்பில் அரசின் அமைச்சர்கள் சிலர் மிக மோசமான இனவாதக் கருத்துக்களை முன் வைத்து வருவதாக சுசில் பிரம ஜெயந்த தெரிவித்தார். அவரின் இக்கூற்றானது அரசின் வங்குறோத்துத் தனத்தை பறை சாற்றி நிற்பதுடன், பாமர சிங்கள மக்கள் மத்தியில் ரஊப் ஹக்கீமை பிரிவினை வாதியாக சித்தரித்துக்காட்டி அதன் மூலம் வாக்குப் பெறும் முயற்ச்சியாக அமைந்துள்ளது  என்றும் கல்முனையின் பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபையின் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முதல்வர் நிஸாம் காரியப்பர் 2014-12-30 ம் திகதி சபைக்கு சமர்ப்பித்ததன் பின்னர் உரையாற்றிய  கல்முனையின் பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீட் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அப்துல் மஜீட்,

தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் உரையாற்றக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும்,  இவ் வரவு செலவுத்திட்டமானது தங்களது பதவிவக்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது வரவு செலவுத்திட்டமாகும் என்றும், எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இருந்து இச்சபையின் பதவிக்காலம் முடிவடைகின்றது என்றும், ஆகவே இது கடைசி வரவு செலவுத்திட்டமாகவும் அமையலாம் என்றும் தெரிவித்தார்.

இவ் வரவு செலவுத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவெனில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய நலநோன்புகை திட்டங்கள் முன் மொழியப்பட்டுள்ளது என்பதாகும். புதிய அணுகுமுறையிலான இவ்வரவு செலவுத்திட்டமானது எதிர்காலத்தில் இம்மாநகர சபையை ஆட்சி புரிய வருபவர்களுக்கு சிறந்ததொரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

உண்மையாகப் பெறக்கூடிய வருமானங்களை அடிப்படையாக வைத்து அதன்முலம் பெறப்படும் நிதியைக் கொண்டு மக்களின் சேவைக்கு முன்னுரிமை வழங்கும் திட்டமாகவும் இத்திட்டம் அமையப்பெற்றது பாராட்டத்தக்கதொரு அம்சமாகும்  என்றும் தெரிவித்தார்.

கல்முனை மாநகரை நாட்டின் வளர்ச்சியடைந்துள்ள மாநகரின் தரத்திற்கு கட்டியெளுப்ப வேண்டும் என்பது நமது கனவாகும். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி இக் கல்முனை மாநகரம் உருவாக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹீம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் இம்மாநகரம் உருவாகுதற்கான அடித்தளம் இட்டிருந்தார். ஆனால் இதனை தற்போதய தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள் மாநகரமாக தரம் உயர்த்தப்பட்டது என்பதனை இச்சந்தர்ப்பத்தில் நினைவுகூருவது என்னுடைய கடமையாகும். இம் மாநகர சபையானது 12வருடங்களைக் கடந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மாநகர முதல்வராக பதவி வகித்த காலத்தில் மாநகர சபையின் 7ஆவது நிறைவு விழா நடாத்தப்பட்டது.  அவ் விழாவில் கிழக்கு மாகாண சபையின் அப்போதய முதலமைச்சர் கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து சிறப்பித்தார் என்பதே வரலாறாகும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் அவர்களே எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டு 13வருடங்கள் நிறைவு பெறுகின்றது. அந் நிறைவையிட்டு சிறப்பான விழாவொன்று ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என்பதனை எனது வேண்டு கோளாக இச் சபையில் முன் வைக்கின்றேன். என்றும் தெரிவித்தார்.
கல்முனை மாநகரின் நவீன அபிவிருத்தி திட்ங்களை துரிதமான முறையில் முன் கொண்டு செல்வதற்கு தனியான அபிவிரத்தி அதிகார சபை ஒன்று நிறுவப்படும் என்று கௌரவ எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய தேசியக் கட்ச்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கல்முனையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வைத்து வாக்குறுதியளித்துள்ளார் அவரது வாக்குறுதியை நாம் வரவேற்பதுடன் இச் சபையினுடாக எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்தார்.

கடந்த 28ஆம் திகதி கல்முனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்த்தில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்கள் உரையாற்றும் போது இப் பிரதேசத்து மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வரும் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் புகையிரதப்பாதை அமைத்துத் தரப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கினார். மிக நீண்ட காலமாக இருந்துவரும் இக்கோரிக்கை தொடர்பிரல் கருத்து வெளியிட்டமைக்காக மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு இச் சபையில் நன்றியியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றமானது கௌரவ மைத்திரிபால சிரிசேன அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.