Header Ads



மைத்திரிபால வெற்றி பெற்றால், பிரதமராக ரணிலை நியமிக்க ஒப்பந்தம்

ஜனாதிபதி தேர்தல் பொது வேட்பாளரான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் மைத்திரிபால சிரிசேன வெற்றி பெற்றால் அவரது அரசாங்கத்தின் பிரதமராக ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க வேண்டும் என்று அரசியல்கட்சிகள் மற்றும் அமைப்புக்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும்.

32 அரசியல் கட்சிகள் மற்றும் வெகுசன அமைப்புக்கள் இந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.

சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தேசிய கொள்கையொன்றின் மூலம் நாட்டை நிர்வகிப்பதே இந்த இணக்கப்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.

No comments

Powered by Blogger.