Header Ads



இந்நாட்டு முஸ்லிம்களின் பரம விரோதி மைத்திரிபால சிறிசேன - ஏ.எச்.எம்.அஸ்வர்

நெல் உரிமையாளர்கள் சங்கத்தின் ஏகபோக உரிமையை தன்வசம் வைத்திருந்தது மாத்திரமல்லாமல் இந்நாட்டின் நெல் மாபியாவாக செயற்பட்டவரே மைத்திரிபால சிறிசேன என்று ஊடக மேற்பார்வை எம்.பி. ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

இந்நாட்டு முஸ்லிம்களின் பரம விரோதி எனவும் முஸ்லிம்கள் ஒருபோதும் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள்

என்றும் அவர் மேலும் தெரிவித்தார். அரபு நாடுகளின் நண்பனான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மீது இந்நாட்டு முஸ்லிம்களும் மிகுந்த மரியாதை வைத்துள்ளார்கள். இந்நாட்டு முஸ்லிம்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பார்கள்.

எமது நாட்டுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணை கொண்டு வந்த போது அரபு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன. இதற்கு ஜனாதிபதி அவர்கள் மீது அரபு நாடுகள் கொண்டுள்ள நட்பும் காரணமாகும் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இராப்போஷனம் அருந்திவிட்டு சுதந்திரக்கட்சியை காட்டிக் கொடுத்து விட்டவர் மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் நெல் குத்தும் ஆலைகளை ஒழித்தவர் இதே மைத்திரிபால சிறிசேன என்பதை முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

முஸ்லிம் மக்கள் மத்தியில் ஓர் உத்வேகம் பிறந்துள்ளதை நான் பார்க்கிறேன். பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென்று முஸ்லிம் இயக்கங்களும், உலமாக்களும் தனிப்பட்டவர்களும் எம்மை கேட்டு வருகின்றனர்.

எனவே, கிழக்கு மக்களுக்கு வாழ்வளித்து அப்பகுதியில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை உருவாக்கி தந்த ஜனாதிபதி மஹிந்தவை ஆதரித்து வாக்களிப்பதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் அணிதிரண்டு நிற்கின்றனர் என்றும் இந்த விடயத்தை அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் அஸ்வர் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

4 comments:

  1. Mr Azwar claimed few days ago, MR cannot be moved even though mountain or rock could bemoved .
    nauthu
    He forget almighty .
    World have have so many leaders and super powers.
    All learned their lessons or blind folded.
    Faizal

    ReplyDelete
  2. உன்மையாளரே உங்கலோடுதானே நேற்ருவரை இருந்தார் அப்போ எங்கபோச்சு இந்த பேச்சு முலு பூசனிக்காய சோற்றூக்குல் புதைத்து வயிருபிழைக்கின்ரீர்கள் சிலவேலை இவர் திரும்பிவந்தால் இதை பொய்யென்ரு உரக்க சொல்வீரோ...............

    ReplyDelete
  3. தேர்தல் முடிந்த கையோடு உங்கள் கணக்கையும் பார்த்துக்கொள்ளவே மக்கள் ஆவலாய் உள்ளார்கள், முங்கூட்டியே எங்கயேனும் போய் ஒழிந்து கொள்ளுங்கள்.

    மாதம் ஒன்றுக்கு ராஜபக்சவுக்கு 200 கோடி ரூபா இலஞ்சம் கொடுத்தே அரிசியின் ஏகபோக உரிமையை மைத்திரிபால சிறிசேனாவின் சகோதரன் தக்கவைத்துக்கொண்டார் என்பதே மக்களுக்கு தெறியாத உண்மை, இது உங்களுக்கும் தெறியும் ஆனால் ஒன்றுமே தெறியாதது போல் சின்னபிள்ளையாய் பேசுகிறீர்கள்.

    200 கோடியை இந்த 10 ஆண்டுகளாக பெறுக்கினால் எவ்வளவு பணம் மகிந்தவுக்கு வந்திருக்கும் என்பதை மக்களே சிந்திக்க வேண்டும், இப்படியாக இலங்கையில் பல வழிகளில் பலபேரிடமிருந்து கருப்புப்பணத்தை பெற்றே தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளை விலைகொடுத்து வாங்குவது.

    ஆனாலும் மூதேவியான அஸ்வர் உங்களுக்கு இந்த அளவுக்கு பாரிய தொகைகள் கிடைக்க இடமேயில்லை,ஏனெனில், மகிந்த அன் கொம்பனி போடும் எலும்புத்துண்டுகள் இருந்தால் போதும் என்பதே உங்கள் வாழ்க்கை.

    ReplyDelete
  4. Mr Azwer,

    Please give an answer for the following questions.

    1. Where were you/ Mahinda when BBS started all drama against the Muslim community?
    2. Where were you/ Mahinda when Aluthgama Muslims' shops and houses set on fire?
    3. Where were you/ Mahinda when many Masjids were demolished by the enemies of Muslims?
    4. Where were you/ Mahinda when Muslim businesses were set on fire?
    5. Where were you/ Mahinda when Muslim women were not allowed to wear the hijab/ nikab?
    6. Where were you/ Mahinda when Muslims sacred book Qu'ran and religion were desecrated?
    I have pointed out just a few incidents that have taken place during Mr Rajapaksa's tenure.

    Can you please provide answers for these questions so that the Muslim community would be in a good position to vote your Sir. Thanks

    ReplyDelete

Powered by Blogger.