25 இலட்சம் வாக்குகளால் மஹிந்த வெற்றி பெறுவார் - பவித்ரா வன்னியாரச்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த மேலும் எந்தவொரு உறுப்பினரும் எமது கட்சியைக் காட்டிக்கொடுத்து, கட்சியிலிருந்து விலகி சர்வதேசம் விரித்துள்ள சதி வலைக்குள் சிக்க மாட்டார்களென்பதனை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவர் மற்றும் அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் நான் அத்தாட்சிப்படுத்துவேன்’ எனவும் உறுதியுடன் தெரிவித்தார்.
ரணிலை பிரதமராக்கவே சர்வதேசம் இந்த நாடகத்தை அரங்கேற்றுகின்றது. ஜனவரி 08 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் எமது ஜனாதிபதியவர்கள் மேலதிக 25 இலட்சம் வாக்குகளால் வெற்றிபெறுவது உறுதியெனவும் கூறினார்.
Post a Comment