Header Ads



மைத்திரிபால தனது பாதையை ஏன் மாற்றினார்..?

எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதற்கான காரணத்தினை அவரது  சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலநறுவையில் இன்று 24-11-2014 மாலை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றியபோதே டட்லி சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய டட்லி, 

பிரதமர் பதவியை எனது சகோதரருக்கு வழங்காமையினாலேயே அவர் விலகிச் சென்றதாக சிலர் கூறுகின்றனர்.

அது பொய்யான  தகவல். அவர் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்திருந்தால், அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும்.

அந்த கட்சியில் உள்ள புதுமையான அரசியல் முறைமை காரணமாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் உள்ள ஏனைய உறுப்பினர்களும் அந்த நிலையையே எதிர்நோக்குகின்றனர்.

இதன் காரணமாகவே எமது உடலில் இரத்தம் உள்ளவரை இந்தவகையிலான செயல்பாடுகளுக்கு இடம் அளிக்க முடியாது என்ற கொள்கையுடனேயே, மைத்திரிபால சிஙிசேன தனது பாதையினை மாற்றிக் கொண்டார் என அவர் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.