Header Ads



ஊரிலே கவனிக்கப்படவேண்டிய எத்தனையோ விடயங்கள் கிடக்கின்ற போது..

ஊரிலே கவனிக்கப்படவேண்டிய எத்தனையோ விடயங்கள் கவனிப்பாரற்றும், செவிடன் காதிலே ஊதிய சங்கு போலவும் கிடக்கின்ற போது, இந்த வீதிப்பெயர் மாற்றம் தானா இப்போதுள்ள முக்கியமான விடயம் எனவும் கேள்வி எழுப்புகிறார்கள். பாரம்பரியமான எமதூரின் எல்லைகள் பறிபோய்க்கொண்டிருக்கின்ற வேளையில், எது எல்லை என்று தெரியாமலே அடுத்த சந்ததிக்கு விட்டுச் செல்லவிருப்பது போல, அதனைப்பற்றியெல்லாம் அக்கறை எடுப்பதற்கு ஆட்களில்லையே என்றும் சலித்துக்கொள்கின்றார்கள்.

ஊரின் பிரதானமான வீதிகளில் ஒன்றான ஆஸ்பத்திரி வீதியை வேறு பெயர்களைக்கொண்டு மாற்றுவதை விட, அந்தப் பெயர் அப்படியே தொடரவேண்டும் அல்லது பழைய ஆஸ்பத்திரி வீதி என்று மாற்றி வரலாறு தக்கவைக்கப்பட வேண்டும் என்பதே பலரதும் கருத்தாக இருக்கின்றது.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் வீதிப்பெயர் மாற்றத்தைக் கைவிடவேண்டுமென பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

டாக்டர் என். ஆரிப்,




No comments

Powered by Blogger.