Header Ads



பறகஹதெனிய பட்டதாரிகள் சங்கத்தின் 20 வது வருடாந்த நிறைவு விழா


பறகஹதெனிய பட்டதாரிகள் சங்கத்தின் 20 வது வருடாந்த நிறைவு விழாவும் சிறப்பு மலர் வெளியீடும் மற்றும் பரிசளிப்பு நிகழ்வும் பறகஹதெனிய தேசிய பாடசாலை மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் எம். ஏ. எம். சல்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வெளிநாட்டுத் தூதுவர் வை. எல். எம் ஸவாஹீh கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதில் உயர் கல்வி அமைச்சின் சிரேஷட உதவிச் செயலாளர் வை. எல். எம். நவவி, இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் முஜிப்தீன், தம்புள்ளை தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சாபி, பாடசாலை அதிபர் ஐ. அப்துர்ரஹ்மான், வைத்தியதிகாரி, சனீக் மற்றும் முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். எம் நளீம் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பறஹதெனியப் பிரதேசத்தில் பல்லைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்கள். புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இதில் கௌரவிக்கப்பபட்டனர்.

இக்பால் அலி




No comments

Powered by Blogger.