Header Ads



கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்க ஜனாதிபதி உத்தரவு

கேஸ் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளார். 

நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் கேஸ் விலையை 250 ரூபாவால் குறைக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். 

களனியில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறுவோரின் தினத்தை அனுஸ்டிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். 

ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன் சீன ஜனாதிபதி இலங்கை வந்தபோது மின் கட்டணம் மற்றும் எரிபொருள்களின் விலையை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. தேர்தல் காலம் வரை மட்டும்.. மக்களே குறைப்பதையெல்லாம் குறைக்கட்டும் அவர்கள் உங்களுக்கு கொடுப்பதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிடாமல் வாங்கி எடுங்கள். போடவேண்டிய சின்னத்துக்கு உங்கள் வாக்குகளை போட்டு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் இந்த அரசாங்கமும் அது சார் அங்காளி பங்காளிகளும் உமக்கு என்னென்ன துரோகங்களைச்செய்தார்களோ அதை விட மிக மோசமான கொடூரச்செயல்கள் இவரகளால் உமக்கு காத்திருக்கு என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete

Powered by Blogger.