Header Ads



பச்சை மிளகாய் சாப்பிட்டு வலியை உணருங்கள் - மஹிந்தவிற்கு பாலித தேவபெரும சவால் (படங்கள்)


சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பச்சை மிளகாய் சவாலை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும எதிர்நோக்கினார்.

சவாலுக்கு அமைய இரண்டு பச்சை மிளகாய்களை இரண்டு நிமிடங்களுக்கு சாப்பிட வேண்டும் என்ற போதிலும் அவர் ஆறு பச்சை மிளகாய்களை சாப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவர் பச்சை மிளகாயை சாப்பிடுமாறு சவால் விடுத்தார்.

நாட்டின் ஜனாதிபதிக்கு தான் இந்த சவாலை விடுப்பதாகவும் ஜனாதிபதியே சிறுநீரக நோயாளிகள் தொடர்பான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் தெவரப்பெரும குறிப்பிட்டார்.

சுகாதார துறைக்கு தேவையான நிதியை ஜனாதிபதியே ஒதுக்காமல் இருக்கின்றார்.

பெரும் தொகையை தனக்காக ஒதுக்கி கொள்ளும் ஜனாதிபதி, சிறுநீரக நோயாளிகளுக்காக சிறு தொகையையே ஒதுக்கிறார்.

இதனால் மூன்று பச்சை மிளகாய்களை சாப்பிட்டு வாயின் வலியை உணருமாறு தான் ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.