Header Ads



நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாதணிகள் வழங்கப்படாமை தொடர்பாக   பாடசாலைக்கு முன்னால் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கல்பிட்டி கோட்டத்திற்குட்பட்ட தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் 40 உள்ளது.இதில் 39 பாடசாலைகளுக்கு இவை வழங்கப்பட்டுள்ள போதிலும் தமது பாடசாலைக்கு இவை வழங்கப்படவில்லை என தெரிவித்து மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது பெற்றோர்களும் மாணவர்களும் பல்வேறு சுலோங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை நடை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.