Header Ads



புத்தளத்தில் 6 ஆண் மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அரசியல் வாதியை தேடி வேட்டை

சுற்றுலா சென்றிருந்தபோது ஆண் மாணவர்கள் அறுவரை துஷ்பிரயோகபடுத்தினார் என்று சந்தேகிக்கப்படும் ஆளும் கட்சியின்  வனாத்தவிலுவ பிரதேசசபை உறுப்பினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து  வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

புத்தளம் கரைத்தீவிலுள்ள பாடசாலை ஒன்றையைச் சேர்ந்த மாணவர்கள் செப்டெம்பர் 02ஆம் திகதியன்று மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கு கல்விச்சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உட்பட பிரதேச சபை உறுப்பினரும் பங்குபற்றினர். செப்டெம்பர் 02ஆம் திகதி சுற்றுலாவுக்கு சென்ற அனைவரும் வெலிகமையில் அமைந்துள்ள பள்ளியொன்றிலேயே இரவு நேரத்தில் தங்கியிருந்தனர். அன்று மாணவர்கள் துஷ்பிரயோகபடுத்தி  இருக்கலாம் என கூறப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.