சிரியாவின் விமானத் தளத்தை ISIS கைப்பற்றியது
சுமார் 500 உயிர்களை பலி வாங்கிய உச்சகட்டப் போரின் நிறைவாக சிரியாவின் டப்கா ரானுவ விமானத் தளத்தை ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிக் ஸ்டேட் போராளிகள் நேற்று கைப்பற்றினர்.
ஏற்கனவே, ஐ.எஸ். படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கா நகரையொட்டியுள்ள இந்த விமானத் தளத்தை கைப்பற்ற கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து அரசுப்படைகளுக்கும், ஐ.எஸ். போராளிகளுக்கும் இடையே நடந்த மோதலில் அரசுப்படையை சேர்ந்த 346 பேரும், ஐ.எஸ். போராளிகளில் 170 பேரும் பலியானதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், டப்கா ரானுவ விமானத் தளம் அமைந்துள்ள பகுதியின் அருகே அந்நாட்டின் ராணுவ வீரர்கள் சுமார் 150 பேரை ஐ.எஸ். போராளிகள் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Post a Comment