வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..!
சுற்றுலா அல்லது மாணவர் வீசாக்களில் தொழில் வாய்ப்பு தேடிச் செல்ல வேண்டாம் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மக்களிடம் கோரியுள்ளது.
மாணவர் அல்லது சுற்றுலா வீசா மூலம் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து சில வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மக்களிடம் பணம் பறித்து வருகின்றன.
இவ்வாறு தொழில் வாய்ப்பு தேடிச் செல்லும் நபர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடுகின்றது.
டுபாய், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இவ்வாறு சுற்றுலா அல்லது மாணவர் வீசாக்களின் மூலம் தொழில் வாய்ப்பு தேடிச் செல்கின்றனர்.
இவ்வாறு தொழில் வாய்ப்பு தேடிச் செல்வோர் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் பொறுப்பு சொல்லாது.
மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வரும் போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான போலி வெளிநாட்டு முகவர் நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கோரியுள்ளது.
Post a Comment