முஸ்லிம்கள் பெளத்த மக்களுக்கு செய்யும் கொடுமைகளுக்கு, அல்லாஹ் தண்டிப்பார் - ஞானசாரர்
நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் பரவுவதை சுட்டிக்காட்டினால் முஸ்லிம் சமூகத்திற்கு வலிக்கின்றது. முஸ்லிம் அமைச்சர்களும் மத தீவிரவாத அமைப்புகளும் இந்த நாட்டில் பெளத்த மக்களுக்கு செய்யும் கொடுமைகளுக்கு நாம் தண்டனை கொடுக்க மாட்டோம் அல்லாஹ் அவர்களை தண்டிப்பார் என தெரிவிக்கும் கலகொட அத்தே ஞானசாரதேரர், பொதுபல சேனா அமைப்பிற்கு அவுஸ்திரேலிய விசா தடை செய்யக் கோருகின்றமையின் பின்னணியில் அவுஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்களே காரணம் எனவும் குற்றம் சுமத்தினார்.
பொதுபல சேனா பெளத்த அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்;
நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் மிக வேகமாக பரவி வருகின்றது. பெளத்த சிங்கள மக்களை குறி வைத்து தாக்குவதில் முஸ்லிம் தீவிரவாதிகள் மும்முரமாகவே உள்ளனர். இலங்கையில் பெளத்த மக்களுக்கு எதிராக முஸ்லிம் தீவிரவாதம் பரவி வருகின்றமையினை சுட்டிக்காட்டினால் அது முஸ்லிம் மக்களுக்கு வலிக்கின்றது.
எமது கைகளில் இரத்தம் படவில்லை முஸ்லிம் மக்களுக்கு எதிராக பொதுபலசேனா ஒருபோதும் செயற்படவில்லை. எம்மை ஆதரிக்கும் பல முஸ்லிம்கள் இன்று எம்முடன் இருக்கின்றனர். எமது கைகள் இரத்தக்கறை படாத புனிதமான கைகள். இது வன்முறைகளை ஆதரிக்காத கைகள். பெளத்தர்கள் எப்போதும் பொறுமையினை கடைப்பிடிப்பவர்கள். எமது பொறுமை நாட்டில் அமைதியை ஏற்படுத்த வித்திட்டுள்ளது. இலங்கையில் பெரும்பான்மையான பெளத்தர்கள் இருக்கின்றனர். ஆனால் ஏனைய இனங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் ஒரு நாட்டிலேனும் அமைதியான சூழல் நிலவவில்லை. அதேபோல் சிறுபான்மை இனத்தவர் அங்கு சுதந்திரமாகவும் இல்லை. அதே நிலைமை இலங்கையிலும் ஏற்படுத்தவே முஸ்லிம் மதவாதிகள் முயற்சிக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவிலும் எமக்கு எதிரான தீவிரவாதிகள்
அவுஸ்திரேலியாவிற்கு நாம் செல்வது தடை செய்யப்பட வேண்டும். எமக்கான அவுஸ்திரேலிய விசாவை தடை செய்ய வேண்டும் என அவுஸ்திரேலியாவில் உள்ள சில அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவை யார் என தேடிப்பார்த்தால் அங்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளே செயற்பட்டுள்ளன. அவுஸ்திரேலியாவில் இயங்கும் முஸ்லிம் மதவாத அமைப்புகளில் குறிப்பிட்ட சில அமைப்புக்கள் அவுஸ்திரேலிய அரசுக்கு இக்கோரிக்கையினை முன் வைத்துள்ளன. அவர்களின் பெயர் விபரங்கள் எமக்குக் கிடைத்துள்ளன. ஆனால் இதை நாம் பெரிதுபடுத்தப்போவதில்லை. நாம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. எமக்கு இலங்கை என்ற சுதந்திரமானதும் அமைதியானதுமான அழகான நாடு உள்ளது. இங்கு வாழ்வதை நாம் புனிதமாக நினைக்கின்றோம். அதேபோல் அவுஸ்திரேலிய எல்லைக்குள் அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் இலங்கைக்குள் முஸ்லிம் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் செயற்படுமாயின் அதற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம்.
முஸ்லிம் இராணுவமொன்று உருவாகும்
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகளின் சகல செயற்பாடுகளும் உள்ளன. உலமா சபைகள், சூரா சபைகள், முஸ்லிம் அமைப்புகள் என பல முஸ்லிம் மதவாத அமைப்புக்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்றும் முஸ்லிம்களுக்கென்று இராணுவம் மட்டுமே இல்லாதுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் அவற்றினையும் உருவாக்கி விடுவார்கள். ஆரம்ப காலங்களில் இருந்த இறுக்கமான கொடூரமான மத விடயங்களை இன்றும் பின்பற்றிக் கொண்டு அதற்கேற்பவே இவர்கள் வாழ்கின்றனர். இன்று சமூகம் மாற்றமடைந்து கொண்டு செல்கின்றது. ஆனால் இன்னமும் இவர்கள் இஸ்லாமிய கொள்கைகளில் ஒடுக்கப்பட்ட மற்றைய சமூகங்களையும் அதில் திணிக்க முயற்சிக்கின்றனர்.
விடுதலைப்புலிகளைப்போல் முஸ்லிம் தீவிரவாதம்
அன்று விடுதலைப்புலிகள் பெளத்த சிங்கள மக்களுக்கு எதிராக செயற்படதைப்போல் இன்று முஸ்லிம் தீவிரவாதம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அமைப்புக்களையும் இயக்கங்களையும் உருவாக்கிக்கொண்டு இந்த நாட்டிற்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்களின் மோசமான செயற்பாட்டினால் அப்பாவி முஸ்லிம் மக்களும் தண்டிக்கப்படுகின்றனர் என்பதை மறந்து விட வேண்டாம்.
மருந்து வகைகளில் கலப்படம்
தீவிரவாத முஸ்லிம் அமைப்புக்கள் தமக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்யும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இன்று இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்து வகைகளிலும் கலப்படம் செய்யப்பட்டு இந்த சிங்கள சமூகத்தை அழிக்கின்றனர். அண்மையில் சுற்றிவளைக்கப்பட்ட மருந்து நிறுவனத்தில் இருந்து 50 கோடி ரூபாய் பெறுமதியான மருந்து வகைகள் தடை செய்யப்பட்டன. ஆனால் அந்த நிறுவனத்திற்கு எதிராக இதுவரையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாட்டில் முஸ்லிம்கள் தவறு செய்தால் சாதாரண விடயமாக மாறி விட்டது. அதை பெளத்தர் எவரேனும் தட்டிக்கேட்டால் இனவாதமாக மாறி விடுகின்றது.
அளுத்கம சம்பவம் தொடர்பில் உண்மை என்னவென்று தெரியாது சம்பந்தன் ஹக்கீம் உட்பட பலர் வாதம் நடத்தி எம்மை குற்றவாளியாக்குகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் செய்யும் தவறை எவரும் சுட்டிக்காட்டுவதில்லை.
பொதுபலசேனா தொடர்பில் தவறான கருத்துக்களை முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பரப்புவதனால் நாம் வருத்தமடைகின்றோம். இவர்கள் நாட்டிற்கு செய்யும் துரோகத்திற்கும் சிங்கள பெளத்த மக்களுக்கு செய்யும் அநியாயங்களுக்கும் நாம் தண்டிக்கப்போவதில்லை. அல்லாஹ்வே இவர்களுக்கு தண்டனை கொடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
allah know everything
ReplyDeletepoda panni
ReplyDeleteMuslimkaluku neengal seyum kodumaiku allah nichayam thandippan thirundhikkollungal avanudaya pidiyil irundhu yarum thappa mudiyazu ungalai mazam mara sallavillai thirundhungal pidicha vidave matan no chanse
ReplyDeleteமுதல் இடி உனக்குதாண்டா என்ட சிப்ஸ்சூ
ReplyDeletepaithyam muthi ulara thodangi vittan
ReplyDelete