சதாம் ஹுஸைனின் கோட்டையை கைப்பற்றும் முயற்சியில் அரச படைகளுக்கு தோல்வி..!
ஈராக்கில் சுன்னி கிளர்ச்சியாளர் வசமிருக்கும் திக்ரிட் நகரை கைப்பற்றும் அரச படையினரின் முயற்சி கடும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஐசிஸ் என அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையினரால் கடந்த ஜ{ன் 12 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட திக்ரிட் நகரை மீட்கும் நடவடிக்கையை ஈராக் இராணுவம் மற்றும் 'pயா ஆயுததாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
எனினும் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கிளர்ச்சியாளர்களின் கடும் தாக்குதல் காரணமாக அரச படை பின்வாங்கியுள்ளது. நேற்று புதன்கிழமை அங்கு எந்த மோதலும் இடம்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் ஹ{ஸைன் ஆதரவாளர்களின் கோட்டையாக இருக்கும் திக்ரிட் தலைநகர், பக்தாதில் இருந்து 100 மைல்கள் தொலைவில் உள்ளது. யுத்த ரீதியில் இந்த பகுதி தீர்க்கமானதாக கருதப்படுகிறது. ஈராக்கில் ஒரு மாத காலத்திற்குள் சுன்னி கிளர்ச்சியாளர்கள் நாட்டின் கணிசமான நிலத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அவர்களுக்கு எதிரான யுத்தத்தில் அரச படை தடுமாறி வருகிறது.
Post a Comment