இஸ்ரேலிய சாத்தான்களினால் 50க்கும் அதிகமான அல்லாஹ்வின் இல்லங்கள் மீது தாக்குதல்
காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் 50க்கும் அதிகமான பள்ளிவாசல்கள் முற்றாக தரை மட்டமாக்கப்பட்டு அல்லது சேதத் திற்குள்ளாகி இருப்பதாக ஹமாஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். காசாவின் அறக்கட்டளை அமைச்சின் துணைச் செயலாளர் ஹஸன் அல் சைபி 50 பள்ளிவாசல்கள் இலக்காகி இருப்பதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
போராளிகள், சிவிலியன்கள், மருத்துவமனைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கட்டிடங்கள் என்று வேறுபடின்றி இஸ்ரேல் தாக்குதல் நடத்துகிறது என அல் சைபி விபரித்துள்ளார். பாடசாலைகளும் எதிர்வரும் காலங்களில் தாக்கு தலுக்கு இலக்காகும் வாய்ப்பு இருப்பதாக அச்சமடைகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"கொல்லப்பட்ட மக்கள் பாரிய புதைகுழியில் அடக்கம் செய்யப்படுவதோடு குடும்ப அடக்கஸ்தலங்களும் பயன்படுத்தப்படுகின்றன" என்று அவர் குறிப்பிட்டார். பாரிய அளவில் காயமடைந்தோர் சேர்க்கப்பட்டிருப்பதால் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன என்று விபரித்துள்ளார். பாதுகாப்பு மோசமடைந்திருப்பதால் இறந்தவர்களை அடக்கம் செய்ய அடக்கஸ்தலத்திற்கு கொண்டு செல்வதும் கடினமாகி இருக்கிறது என்று அல் சைபி குறிப்பிட்டார்.
Post a Comment