Header Ads



நழுவினார்களா..? வெறுத்தார்களா..??


மூலோபாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழான இரண்டாம் மற்றும் மூன்றாம் வர்த்தமானி பத்திரங்கள் மீதான நேற்றைய நாடாளுமன்ற வாக்கெடுபபிலும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பிரதிஅமைச்சர்கள் சிலர் பங்கேற்றிருக்கவில்லை.

ராஜித்த சேனாரத்ன, டிலான் பெரேரா, விமல் வீரவன்ச, ரவுப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, றிசாட் பதியுதீன், காமினி லொக்குகே ஆகிய அமைச்சர்களும், முத்துசிவலிங்கம், வீரகுமார திஸாநாயக்க ஆகிய பிரதி அமைச்சர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை.

இதன் முதலாவது வர்த்தமானி பத்திரம் மீதான வாக்கெடுப்பின் போது அரசாங்கத்தின் 46 உறுப்பினர்கள் பங்கேற்காதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.