Header Ads



சீனாவில் 4 கால், 4 கைகளுடன் பிறந்த குழந்தை

சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள உய்ச்சூ நகரை சேர்ந்த சென் என்பவருடைய மனைவிக்கு கடந்த 2ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு 4 கைகள் மற்றும் 4 கால்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகு நேற்று முன்தினம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதன்மூலம் அதிகப்படியான 2 கைகள் மற்றும் 2 கால்களை மருத்துவர்கள் அகற்றினர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் “அக்குழந்தை தற்போது நலமாக உள்ளது. கருவில் இரட்டை குழந்தைகளாக வளரும் போது ஏற்பட்ட மரபணு கோளாறால் இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. இது மிகவும் வெற்றிகரமான அறுவை சிகிச்சையாகும்” என்று தெரிவித்தனர்.

குழந்தையின் தந்தையான சென் கூறுகையில் “என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நான் அலட்சியமாக இருந்துவிட்டேன். பணம் சம்பாதிப்பதிலேயே நான் குறியாக இருந்த காரணத்தால் அவளை கவனிக்காமல் விட்டுவிட்டேன். அதனை நினைத்து தற்போது மிகவும் வேதனைப்படுகிறேன்” என்றார்.

No comments

Powered by Blogger.