Header Ads



இலங்கையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்காக 200 பேர் விண்ணப்பம்

சிறைச்சாலைகளில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும் வெற்றிடங்களில் ஒன்றாக காணப்படும் அலுகோசு பதவிக்கு தற்போது சுமார் 200 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தூக்கு தண்டனையை நிறைவேற்றும் பணியான அலுகோசு பதவிக்கு பல காலமாக வெற்றிடம் நிலவிவந்தது.

இந்த நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் குறித்த பதவிக்கு தகுதியானவரை தெரிவு செய்வதற்கு அமைச்சின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் அடுத்த வாரமளவில் ஒருவர் இந்த வெற்றிடத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.