Header Ads



இன்டர்போலினால் தேடப்பட்ட இலங்கையர், இந்தியாவில் கைது

(Sfm) சர்வதேச ரீதியாக கடனட்டை மோசடி தொடர்பில் தேடப்பட்டு வந்த இலங்கையர் ஒருவர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பாரிய கடனட்டை மோசடி தொடர்பில் இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் முக்கிய சந்தேகநபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வைத்து அவர் கடந்த வாரமும் போலியான கடனட்டையை பயன்படுத்தி, பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவருடன் மேலும் இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கைதான முக்கிய சந்தேக நபரை நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.