சஞ்ஜீவ கவிரத்ன மறைந்துபோக இப்றாஹிம் வருகிறார்..!
(16-03-2014) சில மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய மாகாண சபையின் மாத்தளை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சஞ்ஜீவ கவிரத்ன மாரடைப்பால் மரணமடைந்தார்.
மத்திய மாகாண சபையில் இருந்த மிகவும் துடிப்பு மிக்க ஒரு உறுப்பினர். இளம் வயதுக்காரர். அத்துடன் சஜீத் பிரேமதாசவின் தீவிர ஆதரவாளர். இவர் மரணத்தால் இடைவெளியாகின்ற இடத்திற்கு வர இருப்பவர் உக்குவலையைச் சேர்ந்த இப்ராஹிம். இந்த இப்ராஹிம் ஒருவகையில் அதிஸ்டக்காரர் என்றுதான் கூற வேண்டும்.
மாகாண சபைக்குப் போட்டியிடுகின்ற இவர் வழக்கம் போல் வெற்றி பெறா விட்டாலும் தோற்றுப் போன வேட்பாளர்களின் மிகவும் முன்னணியில் எப்போதும் இருப்பார். எனவே எப்படியும் மிகக்குறுகிய காலத்திற்குள் இவர் மத்திய மகாண சபைக்குள் நுழைந்து கொள்ள சந்தர்ப்பத்தைப் பெற்றக் கொள்ளவார். அந்தவகையில் இந்த முறையும் கவிரத்னாவின் மரணத்தால் ஏற்படுகின்ற இடை வெளிக்கு இவர் மாத்தளை மாவட்டம் சார்பில் மத்திய மாகாண சபைக்குள் விரைவில் வர இருக்கின்றார்.

அவர் என்னமோ அதிஷ்டக்காரர் தான்.. ஆனால் மக்களாகிய நாம் தான் பாவம்.... வழமை போன்று எதனையும் பெற்றுக்கொள்ள சக்தியற்றோராக தொடர்ந்தும் இருப்பது உறுதி....
ReplyDelete