பேஸ்புக்கால் மாணவி தற்கொலை: பாடசாலை அதிபர் கைது
(Nf) பேஸ்புக்கின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் மாணவி கல்வி கற்ற குருநாகல் ஜோன் கொத்தலாவல பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தற்கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்றின் காரணமாக மன உளைச்சலுக்குள்ளான மாணவியொருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது தந்தைக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

Post a Comment