Header Ads



சாம சிறீ தேசமானிய விருது பெற்றார்

(யு.எல்.எம்.றியாஸ்)

சாய்ந்தமருது முதலாம் குறிச்சியை சேர்ந்த மொஹிடீன் பாவா  விஸ்வா உம்மா தம்பதிகளின் புதல்வரான அல் - ஹாஜ் எம். ஆதம்பாவா அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாம சிறீ  தேசமானிய விருது வழங்கி அண்மையில்கௌரவிக்கப்பட்டார்.

சம்மாந்துறை இலங்கை வங்கியின் சிரேஸ்ட உதவி முகாமையாளராக தற்போது கடமையாற்றிவரும் இவர் கல்முனை சாஹிராக்கலூரி பழைய மாணவரும்,சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினரும்,மத்தியஸ்தர் சபை உறுப்பினராகவும் அகில இலங்கை சமாதான நீதவானாகவும் பதவி வகுத்துவரும் இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளருமாவார்.

No comments

Powered by Blogger.