Header Ads



நைஜீரியாவில் மனித இறைச்சி விற்பனை

நைஜீரியாவில் அனம்பிரா மாகாணத்தில் ஒஸ்–ஒக்வுடு பகுதி உள்ளது. இங்குள்ள ஓட்டலில் மனித இறைச்சி விற்பனை செய்வதாக ஒனித்ஷா போலீசுக்கு தகவல் கிடைத்தது.

உடனே, அந்த ஓட்டலில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பையில் 2 மனித தலைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் 2 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களும் இருந்தன. இது குறித்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, மனிதர்களை கொன்று இறைச்சி சமைத்து விற்பனை செய்வதை ஒப்புக்கொண்டனர். எனவே, ஓட்டல் உரிமையாளர், 6 பெண் ஊழியர்கள், 4 ஆண் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

1 comment:

  1. சரியான தண்டனைகள் வழங்கப்படமையே தற்போது குற்றங்கள் அதிகரிக்கக்காரணமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.