பொதுபல சேனாவுக்கு எதிராக பௌத்த பிக்கு செய்த முறைப்பாடு, ஏற்றுக்கொள்ள மறுப்பு
பொதுபலசேனாவுக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் செய்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மறுத்துள்ளது.
மஹியங்கனை பிரதேசசபையின் உறுப்பினரான வட்டரேக்க விஜித தேரர், தமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி பொதுபலசேனா அமைப்புக்கு எதிரான முறைப்பாட்டை செய்த சென்றிருந்தார்.
எனினும் அவரது முறைப்பாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனையடுத்து அவர் ஆணைக்குழுவின் அலுவலகம் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்.

Post a Comment