Header Ads



மருதமுனையில் விற்பனைக்கு தயாராகவிருந்த கஞ்சா பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது


(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை பொலிஸ்  நிலைய தலைமை காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள் யு .ஏ. கப்பார் அவர்களது நேரடி வழி  காட்டலில் கல்முனை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மருதமுனையில்   விற்பனைக்கு தயாராகவிருந்த ஒரு கிலோ  600 கிராம் கஞ்சா கல்முனை பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது. 

போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பீ.ஏ. சோம குமார் தலைமையிலான போலிஸ் குழுவினர்  இன்று காலை  கஞ்ச கைப்பற்றப் பட்ட வீட்டை சுற்றி வளைத்து  தேடுதல் நடத்திய போது இரண்டு பொதிகளில் மறைத்து வைக்கப் பட்ட  நிலையில்  குறித்த நிறையுடைய கஞ்சா கைப் பற்றப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர் 

இதனுடன் சம்பந்தப் பட்டவர் என்ற அடிப்படையில் மூவர்  சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டவர்கள்   நாளை திங்கட்கிழமை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப் பாடவுள்ளார்.



No comments

Powered by Blogger.