Header Ads



அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான வழக்கு, மார்ச் மாதத்திற்கு ஒத்திவைப்பு

அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் அவமரியாதை செய்ததாக பதியூதீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. மன்னார் நீதவானின் வீடொன்றை அமைச்சரின் ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த நீதவானை இடமாற்றம் செய்யுமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருக்கு அமைச்சர் தொலைபேசி மூலம் உத்தரவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.