வவுனியா பீ.எஸ். அப்துல்லாவின் ஜனாஸா கேரளாவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது
(இர்ஷாத் றஹ்மததுல்லா)
சில தினங்கள் சுகயீனமுற்றிருந்த நிலையில் இந்தியா கேரள மருத்துவ மணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று வபாத்தான வவுனியா பீ.எஸ். அப்துல்லா அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை (2013.12-05) கேரளாவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
நாளை காலை 10.00 மணிக்கு அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அதே வேளை அன்னாரின் மறைவினையடுத்து இன்று 2013-12-04 வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் சில மூடப்பட்டிருந்தன.அதே வேளை நாளை வியாழக்கிழமை அன்னாருக்காக வேண்டிய வவுனியா நகர பள்ளிவாசலில் குர்ஆன் தமாம் செய்யப்படவுள்ளதாக பள்ளிவாசல் நிர்கவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Post a Comment