அக்கரைப்பற்று - கல்முனை சாரணர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த 3 நாள் சாரணர் பயிற்சிப் பாசறை
(யு.எம்.இஸ்ஹாக்)
அக்கரைப்பற்று -கல்முனை மாவட்ட சாரணர் சங்கம் ஒழுங்கு செய்திருந்த மூன்று நாள் சாரணர் பயிற்சிப் பாசறை மாளிகை காடு அல் -ஹுசைன் வித்தியாலயத்தில் வெள்ளி,சனி.ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீத் தலைமையில் இடம் பெற்ற மேற்படி பாசறைக்கு கல்முனை பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் பிரதம அதிதியாகவும் மாளிகைகாடு அல் -ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.நளீர் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்
கல்முனை சாஹிரா தேசிய கல்லூரி ,கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி , பெரிய நீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயம்,கல்முனை இராம கிருஸ்ண மகாவித்தியாலயம்,நிந்தவூர் அல் -அஸ்ரக் தேசிய பாடசாலை ,மாளிகைகாடு அல் -ஹுசைன் வித்தியாலயம் ,சாய்ந்தமருது மல்ஹருஸ் சம்ஸ் வித்தியாலயத்தை சாரண மாணவர்கள் இந்த சாரணர் பாசறையில் கலந்து கொண்டனர்.
சாரணர் பாசறைக்குப் பொறுப்பான ஓய்வு பெற்ற அட்டாளைச்சேனை கல்லூரி உடட்கல்விதுரை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா மற்றும் உதவி சாரண பயிற்சி ஆணையாளர் கே.எம்.தமீம் , மற்றும் எம்.ஏ.சலாம் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்கள். நிகழ்வில் மரநடுகை ,மாணவர்களின் கலை நிகழ்வு என்பனவும் பங்குபற்றிய சாரணர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் அங்கு இடம் பெற்றது.




Post a Comment