இறக்காமம் முஹற்றம் பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா - 2013
இறக்காமம் 06ம் பிரிவில் இயங்கி வரும் ஆங்கிலப் பாலர் பாடசாலையான முஹற்றம் பாலர் பாடசாலை யின் மூண்றாவது ஆண்டு விடுகை விழா நேற்று 2013.12.07 சனிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு இறக்காமம் மத்திய கல்லூரி ஆராதனை மண்டபத்தில் முஹற்றம் பாலர் பாடசாலையின் பணிப்பாளரும் அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் அதிபருமான ஏ.ஜனூர்தீன் தலமையில் நடைபெற்றது.
இன்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாலர் பாடசாலைக் கல்விப் பணிப்பாளர் திரு. இப்றாஹீம் அவர்களும் கௌரவ அதிதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் திரு. எம்.எம் நஸீர் அவர்களும் விஷேட அதிதிகளாக இறக்காமம் றோயல் கணிஷ்ட கல்லூரி அதிபர் திருமதி. றிபாயா நஸீர் மற்றும் பேராதனைப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாலினி அவர்களும் கலந்து கொண்டனர்.




Post a Comment