கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் ஹாசீம் கௌரவிக்கப்பட்டார்
(யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய சாலையில் இடம் பெற்ற சாதனையாளர் கெளரவிப்பில் கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் அல் -ஹாஜ் யு.எல்.எம்.ஹாசீம் நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் ஸ்டீவன் மத்யு தலைமையில் 11.11.2013 ஐந்தாம் தர புலமை பரீட்ச்சையில் சித்தியடைந்த 40 மாணவர்கள் பாராட்டி நினைவு சின்னம் பதக்க மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப் பட்டனர். அத்தோடு அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கிட்ணர் கோபிந்தன் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Post a Comment