மீரிகமயில் நிர்மாணிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்கு பிக்குகள் சங்கம் எதிர்ப்பு
மீரிகம பிரதேசத்தில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்;ள பிரித்தானிய லான்கஷெயார் பல்கலைக்கழகத்தின் கிளைக்கு சோசலிச பிக்கு முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்திற்கு கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய பல்கலைக்கழகத்திற்கான அடிக்கலை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் நாட்டி வைப்பார் என்ற செய்தியை பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment