சித்திரப் போட்டியில் ஹம்தி அஹ்மட் தங்கப்பதக்கம் பெற்றார்
சர்வதேச சிறுவர் தினத்தையிட்டு 'பெசன் பக்' நிறுவனத்தினரால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் நீர்கொழும்பு பாடசாலைகளுக்கிடையே ஹம்தி அஹ்மட் முதலிடத்தை பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
கம்மல்துறை அல் பலாஹ் பாடசாலையில் மூன்றாம் ஆண்டில் கல்விகற்கும் இவர் , யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராசிக் நிரோஸின் மகனாவார். கொழும்பு றோயல் கல்லூரியில் 12-10-2013 அன்று சனிக்கிழமை நடந்த பரிசளிப்பு விழாவின் போது இவர் தனக்கான பரிசை அதீதிகளிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

Post a Comment