கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் 25ஆவது ஆண்டு விழா
(ஏ.பி.எம்.அஸ்ஹர் + யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழா வைபவம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை 2013.10.12 நடைபெற்றது.
வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்திய நிபுணர் பீ.கே. ரவீந்திரன் வைத்தியர்களான வை.எல்.எஸ்.யுசுப்.ஏ.எல்.எம்.அஜ்வத் வைத்தியசாலை அபிவிருத்திச்சங்கத்தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி யு.எல்.நிசார் உட்பட வைத்தியர்கள் சிரேஸ்ட தாதியர்கள் கல்முனை வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment