சிரியாவில் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் (வீடியோ)
சிரியா படையின் காட்டு மிராண்டித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட பலியாகும் அப்பாவிப் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் அதே வேலை சிரிய படைகள் சில பகுதிகளில் மேற்கொண்டுள்ள முற்றுகையின் காரணமாகவும் உண்ண போதியளவு உணவின்றி இறக்கும் குழந்தைகளின் எண்ணிகையும் அதிகரித்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
டமாஸ்கஸ் கிராமப்புறம் ஒன்றில் சிரிய படைகள் மேற்கொண்டுள்ள முற்றுகையின் காரணமாக கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் ஆறுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுவதாக மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment