Header Ads



வென்றது இனவாதம், தோற்றது மனித நேயம்

(J.M.H.)

தேர்தல் முடிவுகள் பற்றி மூத்த ஊடகவியலாளர் ஒருவரிடம் அபிப்பிராயம் கேட்டோம். சற்றென்று அவர் சொன்ன பதில் தான் மேலே காட்டப்பட்டுள்ள 'இனவாதம் வென்றது, மனித நேயம் தோற்றது' என்ற பதிலாகும்.

இது பற்றி விபரமாக அவரிடம் கேட்டோம். வடமேல், மற்றும் மத்திய மாகாணங்களில் அரசு மேற்கொண்ட அபிவிருத்தி காரணமாக அமோக வெற்றி ஈட்டியுள்ளதாகக் கூறுகிறது. எனவே மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களை விட வடமாகாணத்திலே அதிக அபிவிருத்தி இடம் பெற்றுள்ளன. அப்படியாயின் ஏன் வடக்கில் அரசால் வெற்றி ஈட்ட முடியவில்லை.

அதுதான் மறு கோணத்தில் பார்த்ததால் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து அரசினால் வெற்றி கொள்ள முடியாது போன போதம் தெற்கில் அரசு பாரிய வெற்றியை ஈட்டியது என்றால் அதுவும் இனவாதத்தின் வெற்றி என்றார்.

ரனில் விக்கிரம சிங்கயும் சில துறவிகளை அழைத்துக் கொண்டு போய் இரண்டு பள்ளிகளை உடைத்தால் அவராலும் அடுத்த தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று மற்றொருவர் கூறியதிலும் ஏதோ உண்மை இருப்பது போல் தெரிகிறது.

எப்படியோ வென்றது இனவாதம், தோற்றது மனித நேயம் என்பத ஏற்றுக் கொள்ளமுடியும் போல் தெரிகிறது.

1 comment:

  1. இதே கருத்தைதான் இந்த பேட்டி வருமுன்பே நாமும் சொன்னோம்.எத்தனையோ பாடங்கள் அரசுக்கெதிராக கசப்பானவைகளாக வரலாறு நெடுகிலும் இருந்தும் இன்னுமும் இந்த அரசையே மக்கள் கட்டிப்பிடிச்சி கொஞ்சுகிறார்கள்,இதனால்,வடக்கை தவிர மற்ற இடங்களில் தேர்தலில் ஊழல் நடந்திருக்குமோ எனவும் சந்தேகம் நிழவுகிறது.ஆளும் கட்சியில் ஒரு அமைச்சர் மிக அண்மையில் சொன்னாற்போல், அடுத்த 30 வருடங்களுக்கு இவ்வரசை எவரும் கவிழ்க்க முடியாது என்றது உண்மையாகிறது.திருந்தாத சமூகங்கள்.சொற்ப இலாபத்திற்காக நெடுங்கால சுகத்தை தட்டுகிறது.இந்த நடை போதுமா...?இன்னும் கொஞ்சம் வேனுமா...?

    ReplyDelete

Powered by Blogger.