Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் சிராஸிற்கு ஆதரவு


பா.சிகான்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் வீ. சிவகுமார் தனது பதவியை புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார். இந்த இராஜினாமா கடிதத்தை பிரதேச சபையின் செயலாளரிடம் கையளித்துள்ளார்.

அரசாங்கத்துடன் இணைத்து வட மாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் எம். சிராஸிற்கு ஆதரவு வழங்கவுள்ளமையினாலேயே பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் இத்தேர்தலில் சிராஸ் அவர்களை வெற்றிகொள்ள பாடுபடப்போவதாக அதன் போது கூறினார்.

No comments

Powered by Blogger.