Header Ads



இலங்கையிலும் மதசகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் - இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி

இலங்கையிலும் மதசகிப்புத்தன்மையற்ற சம்பவங்கள் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி ஜோசப் ஸ்பிட்டேரி அவர்கள் இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்களின் நிலைமை குறித்து கரிசனை வெளியிட்டிருக்கின்றார்.

வரலாற்று சிறப்பு மிக்க மடுமாதாவின் ஆடி மாதத் திருவிழா இன்று 15-08-2013 திருப்பலிப் பூஜையுடன் நிறைவுபெற்றது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் ஜோசப் ஸ்பிட்டேரி அவர்கள் மற்றும் அநுராதபுரம் ஆயர் நோபட் அந்த்ரானி ஆகியோர் கூட்டாக திருப்பலிப் பூஜை ஒப்புக் கொடுத்தனர்.

ஜனநாயகம் மேலோங்கியுள்ள நாடுகளிலும்கூட கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பின்பற்றுவதற்காக, அவர்கள் மத ரீதியாக ஒடுக்கப்படுவதாகவும் பாப்பரசரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். 

மதங்கள் மீதான ஒடுக்குமுறை, மத சகிப்புத்தன்மையற்ற நிலை என்பவற்றின் ஊடாக, தீய சக்திகள் தலையெடுத்திருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மடுமாதாவின் வழிநின்று சகிப்புத் தன்மையுடன் இத்தகைய தீமைகளில் இருந்து விலகியிருந்து, அயலவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். bbc

No comments

Powered by Blogger.