Header Ads



கடாபியின் காலத்தில் கல்வி அமைச்சராக இருந்தவருக்கு மரண தண்டனை

லிபியா முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் அரசில், கல்வி மற்றும் தகவல் துறை மந்திரியாக இருந்தவர் அகமது இப்ராகிம். இவர் கடாபியின் உறவினர் ஆவார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவில் நடந்த கலவரத்தின் போது சிர்தே நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை ராணுவத்தை ஏவி கொன்று குவித்தார்.

அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இவர் மீது மிஸ்ரதா கிரிமினல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு இவரை குற்றவாளி என தீர்மானித்து மரண தண்டனை விதித்தது.

No comments

Powered by Blogger.