காத்தான்குடி நகரசபையில் இதுதான் நடந்தது..!
காத்தான்குடி நகர சபையின் விஷேட சபை அமர்வு 16.08.2013ம் திகதி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரனையுடன் சிறுவர் பூங்கா ஒன்று அமைப்பது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச் சிறுவர் பூங்கா சமூக ஒற்றுமையை மையப்படுத்தி அமைக்கப்படவேண்டுமெனவும் இதற்கான சபை அங்கீகாரத்தை கோருவதற்காகவும்தான் இவ்வமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது மாறாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தோடு நமது நகர சபையை இணைக்கின்ற விடயம் எதுவும் இவ்வமர்வில் பேசப்படவில்லையென்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தை நகர சபைக்கு அறிமுகப்படுத்தியவர் சகோ. அலவி சரீப்தீன் நளீமி.
ஏ.எல்.எம். ஸபீல் நளீமி
நகர சபை உறுப்பினர்
.jpg)
Thank you Sabeel Naleemi...
ReplyDelete