பம்பலப்பிட்டியில் பொலிஸாருக்கும், கொள்ளையர்களுக்கு துப்பாக்கிச் சூடு
(Tm) கொள்ளையர் குழு ஒன்றிற்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டி- மிலாகிரய டிக்மன் வீதியில் இச்சம்பவம் இன்று 24-08-2013 காலை இடம்பெற்றுள்ளது.
கொள்ளையர் குழுவை சேர்ந்த மூவர் பம்பலப்பிட்டியவில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை கொள்ளையடிக்க முற்பட்டபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் 3 பேர் கொண்டு குழுவொன்று இன்று (24) அதிகாலை கொள்ளையிட முற்பட்டுள்ளது.
இதனை அறிந்த வீட்டார் அவசர தொலைபேசி இலக்கமான 119 அழைப்பை ஏற்படுத்தி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொள்ளையரை பிடிக்க முயன்றபோது கொள்ளையருக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
இதன்போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பம்பலபிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment