Header Ads



200 பேர் திரண்டுவந்து தாக்குதல் - ஹட்டனில் தேர்தல் பதற்றம்

ஹட்டனின் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயம் நேற்றிரவு 11 மணியளவில் சில தரப்பினரால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 200 பேர் வரை கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதுடன், காரியாலத்தின் உடமைகளுக்கு சேதம் விளைவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கலகத்தடுப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் 2 காவல்துறையினர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயத்தின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இதுதவிர, கொட்டகலையில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் வேட்பாளர் ஒருவரது வீடும் தாக்கப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக் காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நேற்று ஹட்டன் - திம்புலபத்தனை – கொமர்சல் பகுதியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த முறுகல் நிலை தொடர்பாக இரண்டு தரப்பினரிடமிருந்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றைய சம்பவத்தில் 8 வாகனங்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தசம்பவத்திற்கு பின்னர் நேற்றிரவு 9 மணியளவிலும் தமது காரியாலயத்திற்கு சிலர் தாக்குதல் மேற்கொண்டு சேதம் ஏற்படுத்தியதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி.திகாம்பரம் குற்றம்சுமத்தியுள்ளார்.

குறித்த சம்பவங்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உடமைகள் மற்றும் சில வாகனங்களும் தாக்குதல்களுக்கு உள்ளானதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. sfm

No comments

Powered by Blogger.