Header Ads



ஈராக்கில் ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 17 பேருக்கு மரண தண்டனை

ஈராக்கில் ஒரே நாளில் 2 பெண்கள் உள்பட 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 17 பேருக்கு  மரண தண்டனை விதித்துள்ளது. இதில் 2 பெண்களும் அடங்குவர். நேற்று அனைவருக்கும் ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

ஈராக் மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த 2 பெண்கள் உள்பட 17 பேருக்கு ஈராக் நேற்று மரண தண்டனை வழங்கியது கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஈராக் அரசு 67 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றி உள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.