நாவிதன்வெளிப் விவசாய அமைப்புக்களின் கோரிக்கை
(அப்துல் அஸீஸ்)
பாரிய சேதங்களுக்குள்ளாகி வரும் நாவிதன்வெளிப் பிரதேச கமநல சேவை மத்திய நிலையத்தை புனரமைத்து தருமாறு விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன.
நாவிதன்வெளிப் பிரதேசத்தில் சுமார் 30வருடங்கள் பழமைவாய்ந்த இந்த அலுவலகமானது கடந்த காலங்களில் எவ்வித புனரமைப்புக்களும் செய்யப்படாத நிலையில் சேதமுற்று வருவதாக இப்பிரதேச விவசாய அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.
மேலும் இவ் அலுவலகத்தின் மேற்பார்வையிலேயே இப்பிரதேசத்தின் சுமார் 12000ஏக்கர் நெல் மற்றும் மேட்டுநில பயிர்ச்செய்கைக்கான காணிகள் காணப்படுவதாகவும் இதன்மூலம் இப்பிரசேத்தில் சுமார் 1500 விவசாயக் குடும்பங்கள் பயன்பெறக் கூடிய நிலை காணக்கூடியதாகவும் இவ் அலுவலக அதிகாரகள் குறிப்பிடுகின்றனர்.
எனவே இச்சேதத்திற்குள்ளாகி வரும் கட்டிடத்தை புனரமைத்றுதுத்தர, பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முன்வரவேண்டும் என்பதே விவசாய அமைப்புக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதேவேளை இக்கட்டிட இடிபாட்டுகளுக்கு மத்தியிலும் இங்கு பல உத்தியோகத்தர்கள் கடமையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment