Header Ads



திருமண வைபவத்தில் மூக்கை கடித்த அரசியல்வாதி

(Tm) ஐக்கிய தேசியக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் திருமண வைபவத்தில் வைத்து மூக்கை கடித்த சம்பவம் ஒன்று அத்தனகலையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை ஒலிப்பரப்பு கூட்டுத்தாபனத்தைச்சேர்ந்த ஒருவரின் மூக்கையே கடித்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எச்.பீ சுஜித் ரொசான் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், வைத்தியசாலைக்கு  சென்ற மாகாண சபை உறுப்பினர் துஷார ஹேமச்சந்திர மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சுஜித் ரொசானின் உறவினர்கள் மீது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. நாட்டில் பல பைத்தியம் பிடித்த வெறிநாய்கள் உலவிவருகின்றன அவைகளில் ஒன்றுதான் இது.

    ReplyDelete

Powered by Blogger.