சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் போசணை பொருட்காட்சி
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
மாணவர்களின் போசாக்கு தன்மையினை அதிகரிக்கும் நோக்கிலும் சக்தி வழங்கக்கூடிய உணவுப் பொருட்களை சரியான முறையில் தெரிவு செய்தல் தொடர்பாகவும் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஒழுங்கு செய்திருந்த போசணை பொருட்காட்சி சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது.
வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஸஹீலா இஸ்ஸதீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வைத்திய அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதி உத்தியோஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment