ஜனாதிபதி மஹிந்த நாடு திரும்பினார் - மாகாண சபைகள் கலைப்பு அறிவிக்கப்படலாம்..!
தன்சானியா மற்றும் சீசேல்ஸ் ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இன்று 02-07-2013 அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலைஇ ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வானூர்தி மூலம் கட்டுநாயக வானூர்தி நிலையத்தை வந்தடைந்தள்ளனர்.
அதேவேளை வடமாகாண சபை தேர்தல் மற்றும் மத்திய மாகாண சபை, வடமேல் மாகாண சபை கலைப்பு பற்றிய தகவல்களும் விரைவில் வெளிவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment