13 க்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய இன்று ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு
அரசாங்கம் வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் பொலிஸ் மற்றும் காணி உட்பட ஐந்து அதிகாரங்களில் கட்டாயமாக திருத்தங்களை கொண்டுவர வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. நாட்டை பிளவுபடுத்த செயற்படும் குழுவினர் இன்று வெளிப்பட்டுள்ளனர். இராணுவ வீரர்கள் உயிர் தியாகம் செய்து மீட்டெடுத்த நாட்டை பிளவுபடுத்தவோ பிரிவினைவாதிகளிடம் கரங்களுக்கு செல்லவோ ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை. அனைத்து தேசப்பற்றுள்ள அமைப்புக்களை ஒன்றிணைத்து இன்று மஹரகமவில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடர்பில்தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். இன்று மஹரகமையில் பேரணியொன்றும் ஏற்பாடு செய்துள்ளோம். இதில் அனைத்து தேசப்பற்றுள்ள அமைப்புகளும் கலந்துகொள்ள ஏற்பாடாகியுள்ளது. வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஐந்து அதிகாரங்களை கட்டாயமாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்களை முன்னெடுப்போம் எனக் கூறினார்.
.jpg)
Post a Comment