கிராமங்கள் தோறும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமும், சட்ட உதவி முகாமும்
(அப்துல்லாஹ்)
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவும் இணைந்து கிராமங்கள் தோறும் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் சட்ட ஆலோசனை உதவி முகாம்களையும் நடத்தி வருகின்றன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) அனுசரணையோடு மூதூர் சட்ட உதவிக்கான நிலையம் இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தையும் சட்ட உதவி முகாம்களையும் வழங்கி வருகின்றது.
ஜுலை மாதத்தின் சமூக ஒருமைப்பாட்டு வாரத்திற்கு சமாந்தரமாக சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவியை வழங்குவதற்கான நடமாடும் சேவை வெருகல் மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் நேற்றும் அதற்கு முந்திய தினங்களிலும் இடம்பெற்றது.
பாட்டாளிபுரம், நல்லுரர், தாகிப்நகர் வெருகல், சூரநகர் ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலுள்ளோர் இந்த சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வையும் சட்ட ஆலோசனை உதவி முகாம்களில் பங்குபற்றிப் பயனடைந்து வருவதாக சட்ட உதவி நிலைய சட்டத்தரணி செல்வி. ஏ.ருக்ஷானா பானு தெரிவித்தார்.
இந்த சட்ட உதவி விழிப்புணர்வு வேலைத் திட்டத்திலும் சட்ட ஆலோசனை உதவி முகாம்களிலும் தேசிய ஒருங்கிணைப்பு மேம்பாட்டு உத்தியோகத்தர். பீ றிவாஸ், மூதூர் சட்ட உதவி நிலைய சட்டத்தரணி செல்வி. ஏ.ருக்ஷானா பானு, திருகோணமலை சட்ட உதவி நிலைய இணைப்பாளர் இரா.திருக்குமரநாதன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

Post a Comment